யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், யாழ். வண்ணார்பண்ணையை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா மகாதேவன் அவர்கள் 11-07-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, மரகதம் தம்பதிகளின் ஏக புதல்வரும், காலஞ்சென்ற கந்தையா, நல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,காலஞ்சென்ற கந்தையா, பரமனாட்சி தம்பதிகளின் பெறாமகனும்,பவானி(சோதி) அவர்களின் ஆருயிர் கணவரும்,துஷ்யந்தி(துளசி-கனடா), குமுதினி(கனடா), ஜீவஹாசன்(B.sc Hons Information technology மொறட்டுவப் பல்கலைக்கழகம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,பத்மரூபன்(காண்டீபன் - கனடா), ஜெனார்த்தனன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,ஜெனிஸ், ஜெசான், ஜெஸ்வின், ஹரிஷ் ஆகியோரின் அன்புப் பேரனும்,காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, புவனேஸ்வரி மற்றும் பரமேஸ்வரன், விக்கினேஸ்வரன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,புஸ்பவதி(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான திருலோகநாதன், அருணகிரிநாதன் மற்றும் சரோஜினிதேவி, கருணாவதி, சர்வலோகநாதன்(ஜேர்மனி), வைத்தீஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, மகேஸ்வரி மற்றும் ஜெகநாதன், ராதாலட்சுமி ஆகியோரின் சம்பந்தியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 13-07-2022 புதன்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் யாழ்ப்பாணம் கோம்பயன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
Join as a member or committee member with pungudutivu old school association. We are always waiting for your response.
fac
Sponsor 2
Sponsor 1
0 Comment
Social Share